இது மிகவும் கொடுமையானது

என் பெயர் பிரகாஷ். கெய்ல் ட்ரெட்வெல் சமீபத்தில் வெளியிட்ட “ஹோலி ஹெல்” எனும் புத்தகத்தில், நான் அம்மாவின் அறைக்குப் பணம் கொண்டு சென்றதாகக் குறை கூறி எழுதி இருப்பதாக அறிந்தேன். இது முழுக்க பச்சைப் பொய். நான் முன்பும் இப்பொழுதும் மற்றும் எந்தவொரு சூழ்நிலையிலும் ஒரு போதும் அம்மாவின் அறைக்குப் பணம் கொண்டு சென்றதே இல்லை. உண்மை இதுவாக இருக்க, தனது குழம்பிய மனம் உருவாக்கிய கட்டுக்கதையில் என் பெயரையும் சேர்த்திருப்பது ஏன் என்று புரியவில்லை. இது மிகவும் கொடூரமானது மட்டுமல்ல; ஒரு கிரிமினல் குற்றமாகும்.

– பிரகாஷ்

source: Gail Tredwell Lied About Me

அம்மா கூறுவதில் எனக்கு சிறிதும் நம்பிக்கையில்லை

என் பெயர் ருக்மிணி . நான் ரீயூனியன் நாட்டைச் சேர்ந்தவள். நான் ஸ்வாமி ப்ரேமானந்த புரியின் (மதுசூதனன்) சகோதரி. கெய்ல் திருவண்ணாமலைக்கு வந்தபோது அவருக்கு ஆன்மீகம் என்றால் என்னவென்பது தெரியாது. அவருடைய கையில் சல்லிக்காசு கூட இருக்கவில்லை, அப்போது அவர் திக்குத் திசை தெரியாத காட்டில் வழி அறியாமல் நிற்பவரைப் போல் இருந்தார். தான் வாழ்வதற்கு, தனது பாதுகாப்பிற்கு ஒரு வழி தேடி நடப்பவராக அவர் இருந்தார். மது அவருக்கு ஆன்மீகத்தைக் குறித்து சில கருத்துக்களை எடுத்து கூறினார். மதுவின் உதவியுடன் கெய்ல் அம்மாவைத் தரிசித்தார் . அன்று கெய்லுக்கு மது மிகப்பெரிய உறுதுணையாக இருந்தார். கெய்ல் ஆசிரமத்திற்கு வந்த சிறிது காலத்திலேயே, 1980-ஆம் வருடம் நானும் அம்மாவை தரிசித்தேன் . அன்று எனக்கு 17 வயது . கெய்லை நான் எனது மூத்த சகோதரியாகவே நினைத்தேன் . அன்று ஆசிரமம் இன்று போல் இல்லை அம்மாவுக்கு 26 வயதுதான் .அம்மா ஒரு மகானாக உலகத்தால் அறியப்படவில்லை. ஆனால், அன்றும் களரியில் ஏராளமான பக்தர்களுக்கு அம்மா தரிசனம் அளித்துக்கொண்டிருந்தார்.

உண்மையில் அம்மாவின் குடும்ப வீடும் அம்மா தரிசனம் அளித்திருந்த களரியும் நாங்கள் வசித்த சிறிய குடிசையும் மட்டுமே அன்று இருந்தன. அம்மாவுடன் பரமாத்மானந்த ஸ்வாமியும் (நீலு) கெய்லும் வசித்த அதே சிறிய குடிலில்தான் நானும் வசித்தேன் . அம்மாவின் வடிவில் இறைவனே வசிக்கும் இந்த இடம் எனக்கு சொர்க்கமாக இருந்தது. கெய்ல் அக்காலத்தில் பேசிய பேச்சிலிருந்து எனக்கு இருந்த அதே கருத்து அவருக்கு இல்லை என்பது புரிந்தது. காலப்போக்கில், அவர் எனது சொர்க்கத்தை நரகமாக ஆக்க ஆரம்பித்தார்.

நான் வயதில் சிறியவளாக இருந்த காரணத்தாலும் கெய்ல் செய்திருந்த வேலை (இது கெய்லின் கூற்று) மீதிருந்த மரியாதையாலும் அவருடன் சேர்ந்து நானும் சேவையில் ஈடுபட விரும்பினேன். உண்மையில் அவ்விதம் செய்யுமாறு அம்மாதான் என்னிடம் கூறினார். அப்போதுதான் கெய்ல் தனது இயல்பின் மறுபக்கத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார். அவர் தனது பிறப்புரிமையாகக் கருதியிருந்த வேலையில் நானும் இடம் பிடிப்பதை அவர் சிறிதும் விரும்பவில்லை. அதனால் அவர் எப்போதும் என்னிடம் “இது என் வேலை” என்று கூறுவார் . அம்மாவுக்குத் தேவையானதைச் செய்ய தனக்கு மட்டுமே உரிமை இருப்பதாகவும் அம்மா தனக்கு மட்டுமே உரியவர் என்றும் அவர் கருதியிருந்தார் . அவரைத் தவிர வேறு யாரும் அம்மாவை நெருங்கக் கூடாது. இந்நிலையில்தான் அவர் எனக்கு முற்றிலும் துரோகம் செய்ய ஆரம்பித்தார் . நான் அம்மாவுக்கு சேவை செய்யத் தகுதியற்றவள் என்று எனக்கு தோன்றவேண்டும் என்ற நோக்கத்துடனும் அம்முயற்சியை நான் விட்டுவிட வேண்டுமென்ற எண்ணத்துடனும் அவர் என்னைக் கேலி செய்ய ஆரம்பித்தார் . என்னை ஆசிரமத்திலிருந்து விரட்டிவிட அவர் முழுமூச்சாகப் பாடுபட்டார் . எனக்கு என் வீட்டில் சுகமாக வாழலாம் என்றும் நான் ஆசிரமத்தை விட்டு போய்விடுவதுதான் எனக்கு நல்லது என்றும் அவர் பலமுறை என்னிடம் கூறினார்.

ஒரு நாள் நாங்கள் இருவரும் அம்மாவின் அருகில் நின்றுகொண்டிருந்தோம். அப்போது அம்மா “என் இரு மகள்களில் ஒருத்தி கருப்பு, மற்றொருத்தி வெளுப்பு-பரஸ்பரம் கைகோர்த்து நிற்பதைக் காணும்போது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா! இவ்வுலகையும் இவ்விதம் காண நான் விரும்புகிறேன். நிறத்தாலோ மதத்தாலோ வேறுபடுத்தப்படாமல் கைகோர்த்து நிற்கின்ற ஒரு உலகைக் காண அம்மா விரும்புகிறேன்” என்றார் . அப்போது அம்மாவுக்கு கேட்காது என்ற நினைவுடன் கெய்ல் என்னிடம்” அம்மா கூறுவதில் எனக்கு சிறிதும் நம்பிக்கை இல்லை. ஏனெனில், எனக்கு உன்னைச் சிறிதும் பிடிக்கவில்லை. ஒருநாளும் உன்மீது எனக்கு அன்பு தோன்றாது ” என்றார். நான் மிகவும் மனம் சோர்ந்துவிட்டேன். என் மனதில் இந்த ஒற்றுமை அனுபவப்பட்டிருந்த போதும். (கெய்லும் நானும் சேர்ந்துதான் அம்மாவுக்கு சேவை செய்து வந்ததால்) கெய்லுடன் இங்கு எப்படி தொடர்ந்து வசிப்பது என்ற பயமும் சந்தேகமும் தோன்றியதே இதன் காரணங்களாகும். எனது வருத்தமான முகபாவத்தைக் காணும்போது அம்மா என்மீது இரு மடங்காக அன்பைப் பொழிவார். இது கெய்லுக்கு கோபம் வரக் காரணமாகும். அப்போது அம்மாவின் அன்பை அனுபவித்ததற்கான விலையை நான் அளிக்க நேரிடும். என்மீது கொண்ட பொறாமையால் நாங்கள் இருவரும் தனியாக இருக்கும் வேளையில் கெய்ல் என்னிடம் கொடூரமாக நடந்துகொள்வதின் மூலம் விலையை வசூல் செய்வார் . அவ்வேளையில் நான் ஒன்றும் பேசாமல் எதிர்ச்செயல் புரியாமல் அனைத்தையும் சகித்துக்கொள்ள முயற்சி செய்வேன். உண்மையில் நான் அவரை ஒரு ராக்ஷஸியாகவே கண்டிருந்தேன். ஏனெனில், அவர் என்னைப் பயமுறுத்தி ரசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இவ்விதமாக. இந்தக் கொடுமையை என்னால் சகிக்க முடியாத நிலை வந்தது. அம்மாவின் மீதுள்ள அன்பில் சிறிதளவும் குறைவில்லை என்றபோதும் நான் வீட்டிற்குத் திரும்பிச் செல்வதற்கு சில அற்பமான காரணங்களைத் தேடிக் கண்டுபிடித்தேன். அம்மாவை விட்டுப் பிரிந்து சென்ற வேதனை இப்போதும் என்னை வாட்டுகிறது. ஆனால் அம்மாவின் நினைவுடன் என் பாதையில் நான் பயணம் செய்யும் வேளையில் அம்மா இறை அவதாரம் என்ற நம்பிக்கை என் மனதில் மேலும் உறுதியாகிறது. அம்மா இவ்வுலகின் எந்த மூலையில் இருந்தாலும் அங்கே சென்று அம்மாவுடன் வசிப்பதற்கான ஒரு வாய்ப்பையும் நான் இழப்பதில்லை. ஏனெனில் அது எனக்கு அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

ஆசிரமத்திலிருந்து வெளியேறி 14 வருடங்களுக்குப் பிறகு கெய்லுக்கு அம்மாவைப் பற்றியும் அம்மாவின் சேவைகளைப் பற்றியும் இதுபோன்ற அவதூறுகள் கூற எப்படி மனம் வந்தது என்பதுதான் எனக்குப் புரியவில்லை. எனக்கு வியப்பாக இருக்கிறது. அம்மாவின் ஆசிரமத்தில் நடந்ததாக கெய்ல் கூறுகின்ற விஷயங்களை வாசிக்கும்போது நான் திடுக்கிடுகிறேன். அம்மாவைப் பற்றிக் கண்டும் அனுபவித்தும் நான் அறிந்தவரையில் இந்த அவதூறுகள் நெறிகெட்டவை. சிறிதும் பொருந்தாதவை. வெறும் கட்டுக்கதைகள் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. கெய்ல் கூறுவது போன்ற நிகழ்ச்சிகளில் எதுவும் ஒரு நாளும் நடக்கவே இல்லை.

இந்நூலை எழுதிய கெய்லைப் பற்றி நான் அறிந்த உண்மைகளைக் கூற விரும்புகிறேன். முழுப் பைத்தியக்காரத்தனம். புனைந்து எழுதப்பட்ட கட்டுக்கதைகள். பொறாமை போன்றவையால் நிறைந்தது அவரது நூல். இந்நூல் உலகிற்கு முன்னால் திறந்து காட்டுவது என்பது இவரைப் போன்ற ஒருவரின் இதயத்தில் குடியிருக்கும் அருவருப்பான குணங்களையே ஆகும்.

ஆனால் எனக்கு இதுவும் தெரியும். அம்மா தனது அளவற்ற அன்பு மற்றும் கருணையால் கெய்லை மன்னித்திருக்கக் கூடும். நான் இன்று “அம்மாவின் அருளால் கெய்லுக்கு அறிவு தெளியட்டும்” என்று பிரார்த்தனை செய்கிறேன் .

-ருக்மிணி (Rukmini Gilbert Ramaswamy, Mauritious)
source: Rukmini’s Memories of Gayatri

கெய்ல் ட்ரெட்வெல்லை நினைக்கும்போது… நீ எதனால் ஆசிரம வாழ்வைத் துறந்தாய்?!

என் பெயர் லக்ஷ்மி. நான் ஹாலந்தில் பிறந்தவளாக இருந்த போதும் கடந்த 29 வருடங்களாக அம்மாவின் அமிர்தபுரி ஆசிரமத்தில் வசித்து வருகிறேன். அது மட்டுமல்ல. கடந்த 19 வருடங்களாக அம்மாவின் அறையில் 24 மணிநேரம் வசிப்பதுடன், அம்மாவுக்கும் சேவையும் செய்து வருகிறேன். அம்மாவுக்கு சேவை செய்தல் என்ற இந்த வரமானது மரணம் வரை எனக்குக் கிடைக்க வேண்டும் என்பது தான் எனது மனப்பூர்வமான பிரார்த்தனையாகும். இதை நான் எழுதுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நானும் ஸ்வாமினி. ஆத்மப்ராணாவும் ( டாக்டர் லீலா) அம்மாவை விட்டுப் பிரிந்து சென்று விட்டதாக ஒரு வதந்தி இணையதளத்தில் வந்திருப்பதாக என்னிடம் சிலர் கூறினர். பரிபூரணமான மனநிறைவுடன் நாங்கள் அம்மாவுக்குச் சேவை செய்தபடி இருப்பதை இதன்மூலம் தெரியப்படுத்துகிறேன். இந்த சந்தர்ப்பத்தில் கெய்லைப் ( காயத்ரி) பற்றியும் அவரிடமிருந்து ஏற்பட்ட அனுபவங்கள் மற்றும் சில விஷயங்களையும் பகிர்ந்து கொள்வதை எனது தர்மமாகக் கருதுகிறேன்.

முதல் அனுபவம்: கெய்ல் 20 வருடங்களாக தான் அம்மாவின் அறையில் வசித்ததாகவும், அம்மாவுக்கு சேவை செய்து கொண்டிருந்ததாகவும் என்று சொல்வதில் சிறிதளவும் உண்மை இல்லை. 1999-ஆம் வருடம் அம்மாவிடமிருந்து விலகிச் செல்வதற்கு முன்பு உள்ள சுமார் ஐந்தாறு வருடங்கள் கெய்ல் அம்மாவின் அறையில் அவர் வசிக்க வில்லை. ஆசிரமக் கட்டிடத்தில் இரண்டாம் மாடியில் உள்ள அறையில் அவர் தனியாக வசித்தார். அதன் பிறகு, எனக்கு உதவி செய்வதற்காக அம்மாவின் அறைக்குக் கீழே இறங்கி வருவது வழக்கம். நான் அம்மாவுடன் வசிக்க ஆரம்பிப்பதற்கு முன்பும், அம்மாவுடனும் கெய்லுடனும் வேறு சில பெண்கள் வசித்தனர். அவர் விலகிச் சென்றவுடன் ஸ்வாமினி கிருஷ்ணாமிர்த ப்ராணாவும் ( சௌம்யா, ஆஸ்திரேலியா ) அம்மாவின் கட்டிடத்தில் வசிக்க ஆரம்பித்தார்.

1981- ஆம் வருடம் கெய்ல் முதன்முதலாக அம்மாவைக் காண வந்த போது, அவரிடம் உடுப்பதற்கு மாற்று உடை கூட இருக்கவில்லை. அன்று ஆசிரமம் என ஒன்று துவங்கப் படவில்லை. அம்மாவின் வீடு மட்டுமே இருந்தது. கெய்லின் ஊரோ, பெயரோ, அவர் வளர்ந்த சூழ்நிலை குறித்தோ எதுவும் கேட்காமல் அம்மா கெய்லை முழுமையாக ஏற்றுக் கொண்டார். எல்லாப் பொறுப்புகளையும் அவரிடம் ஒப்படைத்தார். அன்று முதல், ஆசிரமத்திலிருந்து வெளியேறும் வரை ஒரு அரசியைப் போலவே அவர் வாழ்ந்தார் எனலாம். அவர் அம்மாவின் பெற்றோர்கள் மீதும் சகோதர சகோதரிகள் மீதும் ஆசிரமவாசிகள் மற்றும் பக்தர்கள் மீதும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தினார். அவ்வளவு ஏன்: அம்மாவின் சீடர்களிடம் கூட தனது ஆதிக்க மனப்பான்மையை வெளிப்படுத்தினார் எனலாம். கெய்ல் எப்போதும் ஒரு சர்வாதிகாரியினைப் போல தான் கூறுவதை அப்படியே கேட்கும் ஒரு கூட்டத்தை தன்னைச் சுற்றிலும் வைத்திருந்தார். தான் கூறுவதைக் கேட்காதவர்களை எல்லாம் அவர்களது மன உணர்ச்சிகளுக்குச் சிறிதும் மதிப்பளிக்காமல் மிகவும் துன்புறுத்தினார்.

கெய்லே! உன் கட்டுப்பாடில்லாத கோபத்தையும் உடலளவில் உனது துன்புறுத்தல்களை எத்தனை முறை நான் சகிக்க நேர்ந்தது என்று இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அடி, உதை, கிள்ளுதல், முகத்தில் துப்புதல், முடியைப் பிடித்து இழுத்தல், பயமுறுத்தல் என எத்தனையோ வகையில் நீ என்னைத் துன்புறுத்தினாய்! இவை எல்லாம் உனது தினசரி நடவடிக்கைகளாக இருந்தன. ஒருமுறை சூடான இஸ்திரிப் பெட்டியை நீ என்மீது எறிந்தது நினைவிற்கு வருகிறது. ஆசிரமவாசிகள் மட்டுமல்ல; ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பக்தர்களுக்கு இந்நிகழ்ச்சியைப் பற்றி நன்கு அறிவர்.

ஆசிரமத்தில் யாரும் உன்மீது அன்பு செலுத்தவில்லை: துணையாக இருக்கவில்லை என்றெல்லாம் நீ சொல்வது அபாண்டமான பொய் அல்லவா? உண்மையில் , பாரத மக்களும், வெளிநாட்டவருமான ஆசிரமவாசிகளும் பக்தர்களும் அம்மாவின் சீடர்களும் உன்னிடம் அன்போடுதான் நடந்து கொண்டனர். பக்தர்கள் உன்னைப் பரம்பரை வழக்கப்படி பாதபூஜை செய்தல்லவா வரவேற்றனர் ! பாரதத்தைச் சேர்ந்த பக்தர்கள் உனக்கு தங்கள் நாட்டு உணவுவகைகளைக் கொண்டு வந்து கொடுக்கவில்லையா? உனது உடைகளைத் துவைத்துத் தருவதற்கும் ஆசிரமத்தில் ஆட்கள் இருக்கவில்லையா? உனது கைகால்களைப் பிடித்துவிடுவதற்கும் ஆட்கள் இருந்தார்களே! இவையெல்லாம் உண்மையல்ல என்று உனது மனசாட்சியைத் தொட்டு உன்னால் சொல்லமுடியுமா?
கெய்லே! நீ உண்மையில் எதனால் ஆசிரம வாழ்வையும், சந்யாஸ வாழ்வையும் துறந்து சென்றாய் என்பது உனக்கும் நன்றாகத் தெரியும்; எனக்கும் நன்றாகத் தெரியும். அம்மாவின் ஒரு அமெரிக்க பக்தரை நீ மிகவும் விரும்பினாய். நீ ஆசிரமத்திலிருந்து வெளியேறிய பிறகு அந்த பக்தர் அம்மாவிடம் அந்த உண்மையை நேரில் சொன்னார். பயந்து போன அவர், நீ அனுப்பிய இ-மெயில்களை காண்பிக்கவும் செய்தார். பிரம்மசாரி சுபாமிர்தாவும் மற்றொரு ஆசிரமவாசியும் இ-மெயில்களை அம்மாவுக்கு மலையாளத்தில் மொழிபெயர்த்துக் கொடுக்கும்போது நானும் கூட இருந்தேன். அந்தக் களங்கமற்ற மனிதனை அம்மாவிடமிருந்து அகற்றி உனதாக்கிக் கொள்ள முயன்றாய். ஆனால், உன் விருப்பங்கள் ஒருநாளும் நிறைவேறவில்லை. கெய்லே! நிறைவேறாத எதிர்பார்ப்புகளாலும் பலனளிக்காத ஆசைகளாலும் உன் மனதில் பொறாமையும் பகைமையும் நிறைந்தது. களங்கமற்ற இதயங்களில் உன் பொய், வஞ்சனை ஆகியவற்றை ஏற்றலாம் என்ற எண்ணத்தில் நீ விஷம் கக்கும் பாம்பாக மாறினாய்.
நீ தனிப்பட்ட முறையில் நிகழ்ச்சிகள் நடத்தி உலகம் முழுவதும் சுற்றி வர விரும்பினாய். என்னிடமும் வேறு பலரிடமும் நீ இந்த விருப்பத்தைப் பலமுறை வெளியிட்டாய். இதுபோன்ற ஆசைகளுடன் தான் நீ ஆசிரமத்திலிருந்து வெளியேறினாய். ஆனால் உனது சுயநல விருப்பங்களும் கனவுகளும் நிறைவேறவே இல்லை. நமது விருப்பங்களோ ஆசைகளோ நிறைவேறவில்லையெனில் அவை கோபமாகவோ பழிவாங்கும் மனோபாவமாகவோ வெளிப்படும் என மகான்கள் கூறியுள்ளனர். கடைசியில் அழிந்து போவது நாம் தான். இதுதான் இப்போது உனக்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

அம்மா தமது அளவற்ற கருணையால், நாளடைவில் உன்னிடம் ஏதாவது மாற்றம் ஏற்படும் என்ற எண்ணத்துடன் பலவாய்ப்புகளை அளித்து உனக்கு அருள் புரிந்தார். கடைசியாக சந்யாஸம் என்ற அருளையும் வழங்கினார். இந்த வாழ்க்கை விரதத்தின் தூய்மையை நீ சிறிதளவாவது அறிவாயா? மகான்கள் முக்காலத்தையும் அறிபவர்கள் ஆவர். இருப்பினும் அவர்கள் நாம் வளர்வதற்கும் உயர்வதற்கும் உரிய வாய்ப்புகளை அனைவருக்கும் அளிப்பர். அவர்கள் பூமிதேவியைப் போல் பொறுமையுடன் காத்திருப்பார்கள். ஆனால் உனது விருப்பு, வெறுப்புகளுக்கு மட்டுமே மதிப்பளித்த நீ அந்த விலைமதிப்பற்ற வாய்ப்புகளை எல்லாம் நழுவ விட்டுவிட்டாய். கீழான மனநிலையில் மூழ்கியிருந்த உனக்கு அம்மாவின் அன்பையோ, கருணையையோ வழிகாட்டுதலையோ ஒருநாளும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உனது குற்றம் குறைகளையும் பலவீனங்களையும் அம்மாவின் மீது சுமத்தினாய். உன் மனம் அம்மாவின் மீதுள்ள பகையால் நிறைந்துள்ளது.

பெரும்பாலும் உனது அருகாமையும் நீ நடந்து கொள்ளும் முறையும் எங்களுக்கு பயத்தை அளிப்பதுண்டு. ஸ்வீடன் நாட்டில் ஒருமுறை நீ உன் பிடிவாதத்தால் அம்மாவை ஒரு படகில் ஏற்றி ஆழமுள்ள இடத்தை நோக்கி நீ செலுத்தியதையும் அங்கே அம்மாவை நீரில் கவிழ்த்து விட்டதையும் கண்ட பலரின் நினைவுகளிலும் அது பசுமையாக நிலைத்திருக்கிறது. அவ்வளவு ஆழமுள்ள இடத்திற்கு படகைச் செலுத்தாதே என்று அம்மா உன்னிடம் கேட்டுக்கொண்டதை நான் உள்பட அந்தப் பயணத்தில் இடம்பெற்ற பலரும் கேட்டனர். படகை ஆட்டாதே என்றும் கவனமாகச் செலுத்துமாறும் அம்மா உரத்த குரலில் சொல்வதையும் நாங்கள் கேட்டோம். சட்டென படகு கவிழ்வதையும், உடல் மரத்துப் போகும் அளவுக்கு பனிக்கட்டி போலிருந்த நீரில் அம்மா விழுவதையும் கண்டு நாங்கள் வாய்விட்டு அலறி அழுதோம். அது ஒரு பயங்கரமான காட்சியாக இருந்தது.

பிரம்மசாரிணி பவித்ராமிர்தா (லீலாவதி), விநீதாமிர்தா (ஸ்ரீ லதா) ஆகியோரின் வேண்டுதலைப் புறக்கணித்து விட்டு, விஷத்தன்மையுள்ள நாய்க்குடைக் காளானைச் சமைத்து அம்மாவுக்கு நீ கொடுத்த மற்றொரு சம்பவமும் எங்கள் நினைவை விட்டு அகலவில்லை. அதைச் சாப்பிட்ட பிறகு இரண்டு தினங்கள் அம்மா வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார். ரத்தப் பரிசோதனை செய்த போது மரணம் விளைவிக்கக் கூடிய பயங்கரமான விஷத்தன்மையுள்ள பொருள் அம்மாவின் ரத்தத்தில் கலந்திருப்பதாகத் தெரிய வந்தது. மற்றொரு முறை, குறித்த அளவை விட மிக அதிகமான மருந்தை நீ அம்மாவுக்குக் கொடுத்தாய். அம்மா வயிற்று வலியால் துடித்து சோர்வடைந்தபோது அந்தப் பழியை என்மீது சுமத்தினாய். இதை நீ மறந்திருக்க வழியில்லை.
உன்னைப் போலவே, ஸ்வாமினி கிருஷ்ணாமிர்த ப்ராணாவுக்கும் ஸ்வாமினி ஆத்ம ப்ராணாவுக்கும் சந்யாஸம் கிடைத்தது. அவர்கள் இருவரும் உனது கீழ்த்தரமான இயல்பைக் கண்டு நடுங்கிப் போயிருக்கிறார்கள். இவ்வளவு வெறுப்பும் துரோக சிந்தனையும் பகையும் கொள்ளும் நிலையில் இருக்கும்போது உன்னால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று எங்களுக்குப் புரிந்துவிட்டது. முன்பு நடந்தது எதுவும் எதிர்பாராமல் நடந்த நிகழ்ச்சிகள் அல்ல என்பது எனக்கு உறுதியாகிறது. ஆனால், அம்மா இந்த சம்பவங்களில் எதையும் யாரிடமும் சொல்லவில்லை. அம்மா அவற்றை எல்லாம் ஏற்றுக் கொண்டு, உன்னை மன்னித்து தொடர்ந்து உன்மீது அன்பும் கருணையும் காட்டினார்.

நீ இவ்வளவு செய்த பிறகும் உனக்காகப் பிரார்த்திக்கும்படி மட்டுமே அம்மா எங்களிடம் சொன்னார். அது மட்டுமல்ல; இப்போதுகூட என்னை அழைக்க முயலும் வேளையில், காயத்ரீ எனப் பலமுறை அழைப்பதுண்டு. உனது விஷ வார்த்தைகளை உண்மையெனத் தவறாக எண்ணும் களங்கமற்ற மனிதர்களைக் குருடர்களாக்க நீ முயலும்போதும் உன்மீது அன்பு மட்டுமே இருப்பதாக அம்மா கூறுகிறார். இதைக் கேட்கும்போது அம்மாவின் எல்லையற்ற கருணை மற்றும் தாய்மை அன்பின் முன்னால் தலைவணங்கவே என்னால் முடிகிறது.

ஒரு கலங்கிய, செல்லரித்துப் போன மனம் கூறும் குறைகளின் அடிப்படையில் அம்மாவுக்காக எதிர்ப்புத் தெரிவிக்கவோ அம்மாவைப் பற்றி விவரிக்கவோ வேண்டிய அவசியம் சிறிதும் இல்லை. ஆனால், தர்மத்திற்காக இவற்றை வெளிப்படுத்த நேருகிறது.

கெய்லே ! உன்னைக் குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். உனது அறியாமை என்ற இந்த இருளிலிருந்து நீ வெளியில் வரவேண்டும் என்ற பிரார்த்தனையுடன்.
பிரம்மசாரிணி. லக்ஷ்மி (மௌரின் வில்டேன் பெர்க் )

source: Remembering Gail Tredwell

ஆளுமைக் குறைபாடுள்ள மனநோயாளியின் வெளிப்பாடு

18-ஆம் வயதில் ஆன்மிகத் தேடலில் வீட்டிலிருந்து புறப்பட்ட நான், அந்த இளம் வயதிலேயே அமெரிக்காவிலிருந்து பாரதத்தை வந்தடைந்தேன். இப்போது எனக்கு 64 வயதாகிறது. 1978-இல் நான் திருவண்ணாமலை ஆசிரமத்தில் வசித்த வேளையில் கெய்ல் அங்கே வந்தபோது தான் எனக்கு அவர் அறிமுகமானார். அவ்வேளையில், மிகவும் மதிப்பிற்குரிய ஒரு ஆன்மிக குருவுடன் நான் வசித்துவந்தேன். குருவுடன் மிக நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு இருந்தது. இதனால், கெய்ல் என்னை மிகவும் பணிவுடனும், மரியாதையுடனுமே காண்பது வழக்கம். அவர் என்னிடம் ஆன்மிக சம்பந்தமான பல கேள்விகளைக் கேட்பார்; நான் பொதுவான ஆன்மிக வழிமுறைகளை அவருக்குக் கூறுவேன். 1980-ஆம் ஆண்டு துவக்கத்தில் அம்மாவின் ஆசிரமத்தை அடைந்தபோது, ஆரம்பத்தில் கெய்ல் களங்கமற்ற, கூச்ச சுபாவம் உள்ளவராக இருந்தார். ஆனால், திடீரென்று அவரது சுபாவத்தில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. அவரது பக்குவமின்மை எனக்கு ஆச்சரியத்தை அளித்தது; அவரது அணுகுமுறை அடியோடு மாறியது; பொருந்தாத இயல்புகள் அவரை ஆட்கொண்டது. பொறாமை குணமுள்ள ஒரு குழந்தையைப் போல் அவர் அம்மாவுடன் நடந்துகொண்டார். அம்மாவிடம் ஏதாவது விஷயத்தின் பேரில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், நாங்கள் வசிக்கும் குடிசையின் சுவரை அவர் ஓங்கி மிதிப்பார். அவர் ஆசிரம வாழ்வின் சூழ்நிலைகளோடு இணைந்து செயல்பட ஆரம்பித்தபோது அவருடைய ஆளுமையின் மற்றொரு பக்கம் வெளிப்பட ஆரம்பித்தது. அது அவருடைய பக்குவமற்ற தன்மை என்றே நான் முதலில் கருதினேன் என்றாலும், நாட்கள் செல்லச் செல்ல, அது அவ்வளவு சாதாரணமான குறை அல்ல என்பது எனக்குப் புரிந்துவிட்டது. பிறரை, அவருடைய முகத்திற்கு நேராகவே ஒரு விவேகமும் இன்றி, கேலி செய்யவும், குறை கூறவும் ஆரம்பித்தார். நான் முதல், யாருமே அவரது பக்குவமற்ற செயல்பாட்டிற்கு இரையாவதிலிருந்து தப்பவில்லை. நியாயமான செயலாக இருந்தால் கூட, அவரை யாராவது நேரடியாக விமரிசனம் செய்தால், அவர் உடனே பயங்கரமாக எதிர்ச்செயல் புரிவார்; உணர்ச்சிகளை அடக்க முடியாமல் வெளியிடுவார். ஒருவரை விமர்சிக்கும்போது எதிர்ச்செயல் புரிவது இயல்பே என்றாலும், கெய்லின் எதிர்ச்செயல்கள் தீவிரமாகி வந்தன. என்னுடன் ஓரளவு இருந்த மரியாதையும் மங்கி மறைந்தது. அவர் அகந்தை உள்ளவராகவும், சண்டை போடுபவராகவும் மாறிக்கொண்டிருந்தார். அம்மாவுடன் நெருங்கிப் பழகும் காரணத்தால், ஒருநாள் அவர் ஆத்ம பரிசோதனை செய்ய ஆரம்பிப்பார் என்றும், தனது தவறான செயல்முறைகளைத் திருத்திக்கொள்வார் என்றும் நான் எதிர்பார்த்தேன். துரதிர்ஷ்ட வசமாக அது நிகழவே இல்லை. அவர் ஆசிரமத்திலிருந்து வெளியேறிய காலம்வரை இதே நடைமுறையையே அவர் பின்பற்றினார். அது மேலும் மோசமாகிக் கொண்டிருந்தது.

 

ஆரம்பத்தில் அம்மாவின் பெற்றோரும், சகோதர சகோதரிகளும் வசித்திருந்த வீட்டிற்கு வெளியில் ஒரு சிறிய குடிசை மட்டுமே இருந்தது. அதில்தான் நாங்கள் அனைவரும் வசித்தோம். ஒருநாள் மிக மோசமான ஒற்றைத்தலைவலியால் துடித்த நான் குடிசையில் படுத்திருந்தேன். எனக்கு மிகவும் தாகமாக இருந்தது. அப்போது கெய்ல் ஒரு பழைய துணியை நனைத்து, தரையைத் துடைத்துக்கொண்டிருந்தார். என்னால் எழுந்திருக்கக் கஷ்டமாக இருந்த காரணத்தால், நான் கெய்லிடம் சிறிது தண்ணீர் தருமாறு கேட்டேன். சட்டென அவரது முகபாவம் மாறியது. அலறும் குரலில், நீயே சென்று தண்ணீர் எடுத்துக் குடி என்றார். தொடர்ந்து, அந்த நனைந்த அழுக்குத்துணியை என் முகத்தில் எறிந்தார். இதனால் என் மனம் தடுமாறியது. எழுந்து, அக்குடிசையின் வெளியில் சற்று தொலைவில் இருந்த குளியலறையை நோக்கி, மிகவும் கஷ்டப்பட்டு நடக்க ஆரம்பித்தேன். அது நண்பகல் வேளை வேறு. அதிக வெப்பமாகவும் இருந்தது. அதனால் களரிக்குப் பின்னால் இருந்த நிழலில் நின்று, சிறிது ஓய்வெடுத்தபின், சிறிது சக்தியைப் பெற முயன்றேன். நான் கஷ்டப்படுவதைக் கண்ட அம்மா, விவரம் அறிவதற்காக என் அருகில் வந்தார். சிறிது நேரத்திற்கு முன் நடந்ததை நான் அம்மாவிடம் விவரித்தேன். கெய்லின் இந்தப் புதிய மோசமான நடவடிக்கையால் மனம் வருந்திய அம்மா, கெய்லை அறிவில்லாத குழந்தையாகக் காணுமாறும், அவர் தரும் தொல்லைகளுக்கு எதிராகச் செயல்படக் கூடாதென்றும் என்னிடம் கூறினார். நான் எதிர்த்தால், நானும் அவரைப்போல் அறிவற்றவனாக ஆவேன் என்றார். இது முற்றிலும் அறிவுக்குப் பொருத்தமாக இருப்பதாகத் தோன்றியதால், அன்றுமுதல் பொறுமையையும், சுய கட்டுப்பாட்டையும் பின்பற்ற நான் தீர்மானித்தேன். கெய்ல் அருகில் இருந்த காரணத்தால், இந்த உயரிய கோட்பாடுகளைப் பயில எனக்கு மிக அதிகமான வாய்ப்புகள் இருந்தன என்பதைச் சொல்லவும் வேண்டுமா!

 

திருவண்ணாமலையில் இருந்த காலத்தில், அங்கிருந்த என் முதல் குருவுக்கு சேவை செய்தபோது கிடைத்த அனுபவத்தை வைத்து எனக்கு ஒரு விஷயம் நன்கு புரிந்தது; ஒரு மகானுக்கு சேவை செய்வது என்பது, கடின சாதனைகளைப் பின்பற்றுவது போன்றதொரு தவமாகும். அதனால் எனக்கு கெய்லோடு இரக்கமே தோன்றுவதுண்டு. மகான்களுடன் மிக நெருக்கமாகப் பழகும்போது, பக்தனின் மனதின் உள் அறைகளில் உள்ள கோபம், வெறுப்பு போன்ற தீய குணங்கள் வெளியில் வந்து, அளவற்ற மனப்போராட்டத்தை ஏற்படுத்தும். இது ஒரு மனிதனின் புறச்செயல்களிலும் வெளிப்படக்கூடும். ஆனால், நாளடைவில், உண்மையில் நிகழ்வது என்ன என்பதை அறியும் பக்தன், அந்தத் தீய வாசனைகளைத் துறக்கவும், தன்னைக் கட்டுப்படுத்தவும் கற்கிறான். இக்குணங்கள், முன்னரே குடித்த விஷத்திற்கு நிகராகும். இவற்றைத் துறக்கவில்லை என்றால், ஆரோக்கியம் உண்டாகாது. மற்றொரு விதத்தில் கூறினால், இறந்த காலத்தில் அறியாமையால் சம்பாதித்து வைத்துள்ள தீய வாசனைகளை அடியோடு அழித்தால்தான் மனத்தூய்மை ஏற்படும். அம்மாவுக்கு இவ்விஷயம் நன்றாகத் தெரியும். அதனால் எங்களுடைய தீய குணங்களைக் குறித்தும், மனப்போராட்டங்களைக் குறித்தும் விழிப்புணர்வு பெறுமாறு அம்மா எங்களுக்குக் கற்பித்து வந்தார். வெகுநாட்களுக்கு முன்பே அம்மா என்னோடும், கெய்லோடும் உபதேசித்த விஷயம்: “குரு முதலில் தனது தெய்விகத்தன்மையை சீடனுக்கு வெளிப்படுத்துவார்; பின்னர் சீடனைத் தூய்மைப்படுத்த, அவனுடைய வாசனைகளை வெளியில் கொண்டுவருவதற்கு உதவும் வகையில் செயல்படுவார். இவ்வாறு செயல்படுவது, ஒரு மனிதனை ஆன்மிக முன்னேற்றத்தை நோக்கி வழிநடத்தவே ஆகும்.” இவை நாம் படிக்கவேண்டிய பாடங்களாகும். முன்பே கூறியது போல் நான் கெய்ல் மீது இரக்கம் காட்டினேன். ஆனால், அவருடைய கோபமும், அகந்தையும், முட்டாள்தனமும் மாறவில்லை என்பது மட்டுமல்ல; மாறாக, நாளாக ஆக அதிகரித்தும் வந்தது. அவருடைய பிடிவாதத்தைக் கண்டு நான் வியப்பில் ஆழ்ந்தேன். ஆனால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தொடர்ந்து நான் அவரிடமிருந்து போதுமான அளவு விலகி இருக்கத் தீர்மானித்தேன். அவர் ஆசிரமத்தில் வசித்த இறுதிக் காலக்கட்டங்களில் இயன்ற அளவு மிகக்குறைவாகவே அவருடன் பேசினேன். இப்போது அவர் தனது நூலின் மூலம் அம்மாவுக்கும், அம்மாவின் சீடர்களுக்கும் எதிராக உயர்த்தும் குற்றங்களை – என்னைத் துன்புறுத்தினார் என்ற குற்றங்களை – அவருடைய 20 வருட ஆன்மிக வாழ்வு காலத்தில் நான் கேட்டதில்லை. இந்தக் குற்றங்களைப் படிக்கும்போது, அவர் தவறான சிந்தனைகளுக்கு ஆட்பட்டிருப்பதாகவும், மனநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் நான் கருதுகிறேன். தனது புத்தகத்தில் அவர், “என் நம்பிக்கைகளை நிரூபணம் செய்யவும், உண்மையையும், சங்கல்பத்தையும் வேறுபடுத்தி அறியும்போது நான் மிகவும் வருந்துகிறேன்” என்று எழுதி இருப்பது, கெய்லின் தவறான எண்ணங்களை மிகவும் நன்றாக எடுத்துக் காட்டுகிறது.

 

மன அழுத்தநோயின் ( டிப்ரஸன்) அறிகுறிகளில் இது போன்ற ஒரு நிலை உண்டு. இது பிற நோய்களுக்கும் மேலாக, மாற்ற இயலாத தவறான (பொருந்தாத) செயல்களும், வருத்தமும், கோபமும் உள்ள ஒரு மனநிலையும் உருவாகலாம். மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு மிகவும் நெருக்கமுள்ளவர்களைக் கூட சந்தேக நோயின் கண்களின் மூலம் மிகத் தவறான கண்ணோட்டத்துடன் காணக்கூடும். இல்லாத காரியங்களை அவர்கள் மீது சுமத்தலாம். பல்வேறு காரணங்களால் மனநிலை தடுமாறும்போது, இதுதான் நிகழும். இவ்விஷயத்தில் மருந்துகள் மிகவும் உதவி செய்யும். ஆனால், தனக்கு மருத்துவ சிகிச்சை தேவை என்று சம்மதிப்பது மிகவும் கஷ்டமாகவும், நாணமாகவும் தோன்றக்கூடும். ஆசிரமத்திலிருந்து வெளியேறியபோது கெய்லின் மனநிலை மிகவும் மோசமாக இருந்தபோதிலும், அவர் இதுபோன்ற ஒரு புத்தகம் எழுதுவார் என்றோ, அதை வெளியிடுவார் என்றோ எனக்குத் தோன்றவில்லை. அவரிடம் அளவற்ற கோபமும், வெறுப்பும் வெளிப்பட்டிருந்த போதிலும், இதுபோல் ஒரு நூல் எழுதுவார் என்று நான் சிந்தித்தது கூட இல்லை. ஆத்ம நாசத்திற்குக் காரணமாகும் ஒரு நூலை, ஆன்மிகப் பாதையைத் தேர்ந்தெடுக்காதவர்களும், ஆன்மிகப் பாதையின் தொடக்கத்தில் உள்ளவர்களின் ஆன்மிக நம்பிக்கையையும் குலைக்கும் இதுபோன்ற ஒரு நூலை எழுதுவார் என நினைக்கவில்லை. அம்மாவின் மகிமையைக் குறித்து ஏதாவது ஒரு கருத்து அவருக்கு நிச்சயமாக உண்டு. அவர் போனபோது அவர்மீது அதிக அளவில் இரக்கத்தை வெளிப்படுத்தியவர்கள், அவரிடம் புத்தகம் எழுதுமாறும், அதை வெளியிடுமாறும் தூண்டியிருக்கக்கூடும். அதைச் செய்யவேண்டும் என்று கூறியிருக்க வேண்டும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அவர்களில் சிலர், குருவைப்பற்றிய விஷயங்களில் எதிரான கருத்துக்களை வெளியிட்டவர்கள் ஆவர். எளிதில் வளைந்து கொடுக்கும் நிலையில் கெய்ல் இருப்பதைக் கண்ட அவர்கள், ஒருவேளை வாய்ப்பைப் பயன்படுத்த முன்வந்திருக்க வேண்டும்; புத்தகத்தை வெளியிட்டிருக்கவேண்டும். இதுபோன்ற சில கருத்துக்களை புத்தகத்தின் இறுதியில் கெய்ல் குறிப்பிடுகிறார். ஒரு திட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்ற நோக்கம் இதன் பின்னால் இருப்பது நன்கு தெளிவாகிறது.

– ஸ்வாமி பரமாத்மானந்த புரி ( நீல்ரோஸ்னர், அமெரிக்கா)

source: She is very confused and mentally unwell

உண்மையை மறைக்கும் பொய் பிரசாரங்கள்

என் பெயர் சுபாமிர்த சைதன்யா . நான் 1989-ஆம் வருடம் முதல் அம்மாவின் ஆசிரமத்தில் வசித்து வருகிறேன். அம்மாவைக் குறித்தும், அம்மாவின் நிறுவனத்தைக் குறித்தும் கெய்லும், அவருடைய கைக்கூலிகளும் உருவாக்கி உள்ள பொய்யாகப் புனைந்து எழுதப்பட்ட கட்டுக்கதைகளையும் கேட்கும்போது நான் அதை எதிர்த்து எழுதவேண்டிய நிலையில் இருக்கி்றேன்.

சந்நியாஸப் பாதையைத் தேர்ந்தெடுப்பவர்கள் மிகச் சிலரே. அனைவராலும் அப்பாதையில் உறுதியாக நிற்க முடியாது. இவ்விஷயம் மனதில் வரும்போது எனக்கு, சந்நியாஸப் பாதையிலிருந்து தான் விலகியதற்கான காரணம், தனது உலகியல் ஆசைகளே என்ற உண்மையை ஏற்க மறுத்து, அம்மாவும் அம்மாவின் ஆசிரமும் தான் பிரச்னைகளுக்கான காரணம் என்று கூறி, தன்னை நல்லவளாகக் காட்டிக்கொள்ள கெய்ல் முயல்வது எனக்கு நன்கு புரிகிறது.

அம்மாவுக்கான மொழிபெயர்ப்பு செய்வதற்கான வாய்ப்பு கிடைப்பதை நான் மிகப்பெரிய பாக்கியமாக, அருளாகக் கருதுகிறேன். அம்மாவின் வாழ்க்கை முறையை அருகிலிருந்து காணும் வாய்ப்பு இதன்மூலம் எனக்குக் கிடைப்பதுண்டு. நான் கடந்த 24 வருடங்களாக ஆசிரமத்தில் வசித்து வருவதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஆனால், கெய்ல் தனது புத்தகத்தில் எழுதியுள்ள வகையில் எந்தவொரு அதர்மமான சம்பவமும் அம்மாவின் சந்நிதியில் ஒருமுறைகூட நடந்ததில்லை. அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததை விளக்கும் சிறிய ஆதாரம் கூட எனக்குக் கிடைக்கவில்லை.

கெய்ல் ஆசிரமத்திலிருந்து வெளியேறிய உடன் நடந்த ஒரு விஷயத்தை நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டிய நிலையில் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. ஒரு அமெரிக்க பக்தனும், நானும், மற்றொரு பிரம்மசாரியும் அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்த வேளையில், அந்த அமெரிக்க பக்தர் அம்மாவிடம் ஒரு விஷயத்தைக் கூறினார். அவர் கூறியதை நான்தான் அம்மாவுக்கு மொழிபெயர்த்துக் கூறினேன். அதைக் கூறுவதற்கு முன்னால் உங்களிடம் ஒரு உண்மையைக் கூறுகிறேன். ஒரு மொழிபெயர்ப்பாளரைப் பொறுத்தவரை ரகசியத்தைப் பாதுகாக்க வேண்டியது மிக முக்கியமான கடமையாகும். இன்றுவரை அதை நான் பின்பற்றியும் வருகிறேன். வருங்காலத்திலும் அவ்வாறே நடந்துகொள்வேன். ஆனால், கெய்ல் அம்மாவுக்கும், அம்மாவின் நிறுவனத்திற்கும் எதிராகச் செய்துவரும் பொய் பிரசாரத்தைக் காணும்போது நான் இந்த நிகழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் கட்டாயத்தில் இருக்கிறேன். அதேசமயம், அந்த பக்தரின் பெயரை வெளியிட விரும்பவில்லை.

அமெரிக்க பக்தர் அம்மாவிடம், கெய்லுக்கு 1994-ஆம் வருடம் முதல் தன்மீது விருப்பம் தோன்றியது என்று கூறினார். அந்த பக்தரின் அருகாமையைத் தான் விரும்புவதை கெய்ல் நன்கு வெளிப்படுத்தி வந்தார். பயண வேளைகளில் அந்த பக்தருடன் பேசுவதற்காகச் செல்வார். இல்லாவிடில், அமிர்தபுரியிலிருந்து அவருக்குப் போன் செய்வார். ஆரம்பகாலத்தில், கெய்லின் பேச்சில் பொருத்தமற்றதாக எதுவும் இருப்பதாக பக்தருக்குத் தோன்றவில்லை. ஆனால், நாளடைவில் கெய்லின் செயல்களில் ஒரு மாற்றம் இருப்பதை அவர் உணர ஆரம்பித்தார். அவர் தவறான நோக்கத்துடன் தன்னை நெருங்குவதைப் புரிந்துகொண்ட பக்தர் குழப்பத்தில் ஆழ்ந்தார். தாமதமின்றி கெய்ல் அவரிடம், தான் அவரை மிகவும் நேசிப்பதாகவும், அவருடன் உறவுகொள்ள விரும்புவதாகவும், இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்றும், குடும்ப வாழ்வை ஆரம்பிக்கலாம் என்றும் கூட அவர் கூறினார். கெய்ல் கூறியதைக் கேட்ட பக்தர் திடுக்கிட்டார்; மன அமைதியை இழந்தார். நாம் இருவரும் திருமணம் செய்துகொள்வது என்பது நடக்க இயலாத காரியம் என அவர் எடுத்துரைத்தார். அவரால் அம்மாவுக்கு இவ்விதம் துரோகம் செய்வதை நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை.

கெய்ல் பின்பற்றிவரும் சந்நியாஸ தர்மத்தைப் பற்றி அவருக்கு எடுத்துரைக்க அந்த பக்தர் எவ்வளவோ முயற்சி செய்தார். இருப்பினும், அவரது வார்த்தைகளை கெய்ல் சிறிதும் ஏற்றுக்கொள்ளவில்லை. கெய்ல் தொடர்ந்து அந்த பக்தருக்கு போன் செய்வார். இ-மெயில் அனுப்புவார். இது விடாமல் தொடர்ந்து வந்தது. “ஆசிரமத்திலிருந்து நான் வெளியேறியபின், நாம் இருவரும் சேர்ந்து வசிப்பதற்கு நீ ஒரு அபார்ட்மென்ட் வாங்கவேண்டும்” என்று அவர் அந்த பக்தரைத் தொந்தரவு செய்ய ஆரம்பித்தார்.

ஆசிரமத்திலிருந்து வெளியேறிய பிறகு கெய்ல் அம்மாவையும், நிறுவனத்தையும் பற்றிப் பொய்க்கதைகளைப் பிரசாரம் செய்ய ஆரம்பித்தபோதும், அவர் எக்காரணத்தால் ஆசிரமத்திலிருந்து வெளியேறினார் என்ற உண்மையை அம்மா உலகிற்கு எடுத்துரைக்கவில்லை. ஏனெனில், மக்களின் மனதில் கெய்ல், மோசமானவளாகப் பதிவதை அம்மா விரும்பவில்லை. துரதிர்ஷ்டவசமாக, அம்மாவின் இந்தக் கருணை நிறைந்த இதயத்தை கெய்ல் ஒருநாளும் காணவோ, புரிந்துகொள்ளவோ இல்லை.

தனது வாழ்வையும், அனுபவங்களையும் உள்ளதை உள்ளதுபோல் அப்படியே உலகின் முன்னால் காட்டுவதுதான் கெய்ல் எழுதிய நூலின் நோக்கமெனில், இந்த முக்கியமான நிகழ்ச்சியை மட்டும் அவர் ஏன் எழுதவில்லை? உண்மையை மறைத்து எழுதும் பொய்யான பிரசாரமே இந்நூல் என்பது இதன்மூலம் நன்கு விளங்குகிறது. இதுபோலவே, மற்றொரு விஷயத்தையும் எழுதாமல் மறைத்துவிட்டார்.

ஆசிரமத்திலிருந்து வெளியேறிய அவர், சில வருடங்களுக்குப் பிறகு ஒரு வெளிநாட்டவரைத் திருமணம் செய்துகொண்டதையும், தொடர்ந்து அவரை விவாகரத்து செய்ததையும் ஏன் எழுதவில்லை? இந்த விவரம் சமீபத்தில்தான் எனக்குத் தெரியவந்தது.

– சுபாமிர்தா

source: Gail Tredwell’s Lie of Omission